Tuesday, 10 January 2017

பெண் பார்த்த படலம்

வெகுதூர 
வேறு திசைப் பயணங்களில் 
ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் 
அந்த ஊரில் 
'பெண் பார்த்த படலம்' ஞாபகம் !
முகம் மட்டும் மனதில்.

அம்மாவைக் கேட்டால் 
அத்தனையும் சொல்வார் 
பெயர் உட்பட 
இத்யாதி இத்யாதி...

தவிர்க்க முடியாமல் 
இப்போது 
அந்தப் பெண்களிடம் 
அன்பும் பரிவும்!

ஒருமுறை காண 
ஏங்குகிறது மனம் !

No comments:

Post a Comment