வெகுதூர
வேறு திசைப் பயணங்களில்
ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும்
அந்த ஊரில்
'பெண் பார்த்த படலம்' ஞாபகம் !
முகம் மட்டும் மனதில்.
அம்மாவைக் கேட்டால்
அத்தனையும் சொல்வார்
பெயர் உட்பட
இத்யாதி இத்யாதி...
தவிர்க்க முடியாமல்
இப்போது
அந்தப் பெண்களிடம்
அன்பும் பரிவும்!
ஒருமுறை காண
ஏங்குகிறது மனம் !
வேறு திசைப் பயணங்களில்
ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும்
அந்த ஊரில்
'பெண் பார்த்த படலம்' ஞாபகம் !
முகம் மட்டும் மனதில்.
அம்மாவைக் கேட்டால்
அத்தனையும் சொல்வார்
பெயர் உட்பட
இத்யாதி இத்யாதி...
தவிர்க்க முடியாமல்
இப்போது
அந்தப் பெண்களிடம்
அன்பும் பரிவும்!
ஒருமுறை காண
ஏங்குகிறது மனம் !
No comments:
Post a Comment