Friday, 17 February 2017

நானும் ஊளையிடுகிறேன்!



இரவானதும்
நாய்கள் ஊளையிடுகின்றன
மந்திரக்கோலால்
அதனதன் கதவைத் திறந்து
அதனதன் வாசலில்
வந்தமர்ந்து கொள்கின்றன.

பகலில் எதிர்வருகையில்
என்னை ஒருபொருட்டாக..
கண்டுகொள்ளாத நாய்கள்
இருளில் சிறுஅசைவெனினும்
குரல் உயர்த்துகின்றன.

பிஸ்கட்டுகளை அள்ளி வீசுகின்றன
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளையும் !

கவ்விக்கொண்டதால்
இப்பொழுதெல்லாம்
இரவானதும்
நானும் ஊளையிடுகிறேன்!
ஊஉ... ... ... ஊஉ..

No comments:

Post a Comment