எத்தனை கவனமிருந்தும்
நிகழ்ந்து விடுகிறது விபத்து.
மோதிக்கொன்றோம்
நானும் ரயில்பூச்சியும்!
என் சக்கரத்தில்
நசுங்கியது ரயில்...
ரயிலோட்டத்திற்கு நிற்கும் நான்
ரயில்பூச்சிக்கு நின்றிருக்கலாம்!
இப்பொழுதெல்லாம்
என்னை முந்திச் செல்கின்றன
ரயில்பூச்சிகள்.
பிறகொருபொழுதில்
ஒன்றின்மீது ஒன்றாக
ரயில்பூச்சிகள் நகர்கையில்...
உதட்டில் சிறுபுன்னகையோடு - நானும்
ஊர்ந்து சென்றேன்!
No comments:
Post a Comment