அந்த மரத்தில்
இரண்டு கிளிகள்
பச்சைக் கிளி பேசாமடம்
பஞ்சவர்ணக் கிளி பாராமுகம்
இரண்டு கிளிகள்
பச்சைக் கிளி பேசாமடம்
பஞ்சவர்ணக் கிளி பாராமுகம்
கனிகளைச் சுவைத்தபோது
பச்சை பஞ்சவர்ணமாயிற்று
பஞ்சவர்ணம் மரங்கொத்தியாயிற்று.
பச்சை பஞ்சவர்ணமாயிற்று
பஞ்சவர்ணம் மரங்கொத்தியாயிற்று.
கிளிகள் சிறகூன்றி நிற்க
மரம் கிளைவிரித்து
அந்தரத்தில் பறந்தது.
வேறெங்கோ வேரெங்கோ விடும்.
மரம் கிளைவிரித்து
அந்தரத்தில் பறந்தது.
வேறெங்கோ வேரெங்கோ விடும்.
அதிகாலையிலோ
ஆதி யாமத்திலோ
இப்போதந்தக் கிளிகள்
என்ன பேசிக் கொள்ளும்?
ஆதி யாமத்திலோ
இப்போதந்தக் கிளிகள்
என்ன பேசிக் கொள்ளும்?
மாறா வசனம்
கீ.. கீ.. என்றா ?
கீ.. கீ.. என்றா ?
இனி எக்காலத்தும்
கிளிபரப்பி நிற்கும்
மரம்.
கிளிபரப்பி நிற்கும்
மரம்.