Tuesday, 27 November 2018

வண்ணதாசன் சார் சிறப்புரை : Sep. 25, 2018

வண்ணதாசன் சார் சிறப்புரை Sep. 25, 2018: நேற்றைய பொழுது இனிமையாக இருந்தது. எங்கள் கல்லூரியில் வண்ணதாசன் சார் சிறப்புரை. ரசனையான, கவித்துவமான உரை. சாரின் உரை... Composed music போல... அது ஒரு சிறு இசை அல்ல... பெரும் நாதம்! கவிஞனின் ஆழ்மனதின் நாதம்... ஒரு மணி நேரப் பேச்சும் மாணவ, மாணவிகளைக் கட்டிப் போட்டிருந்தது. குழந்தைகள் கவிதைகளில் சொக்கிப் போயிருந்தார்கள். எனக்கு... தியானம் செய்து முடித்ததைப் போல இருந்தது. அவ்வளவு நேர்த்தியான உரை. தெளிவான, நிதானமான உரை. ஒவ்வொரு துளியாகச் சிந்தி... பெருமழையாவது போல.... சுழித்தோடும் நதியாவது போல... ஒவ்வொரு சொல்லாகக் கோர்த்து... கவிமழையாகப் பொழிந்தது, சாரின் உரை.
எப்படி எழுத வேண்டும் என்பதை ஏற்கனவே கற்றுத் தந்திருக்கிறார்.
எப்படிப் பேச வேண்டும் என்பதை... நேற்றைய உரையின் மூலம் கற்றுத் தந்தார்.
உங்களில் எத்தனை பேர் .. நேற்றோ... முன்தினமோ.. அல்லது மூன்றாம் நாளோ. .. நிலவைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார். எங்கள் கல்லூரி மாணவர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில நல்ல கவிதைகளை; இளம் கவிஞர்களைப் பாராட்டினார். அவர்களின் பெயரைச் சொல்லி; அவர்களின் கவிதைகளைச் சொல்லி...மகிழ்ந்தார். ராபியா, விஸ்வநாத பிரதாப்சிங், பாலசுப்பிரமணியன், நஸரீன்.. இன்னும் சில பெயர்கள்.
அவர்கள் அத்தனை பேரும் நேற்று நிலவாக இருந்திருப்பார்கள்.
வண்ணதாசன் சாரின் குரல் வழியாக உச்சரிக்கப்பட்ட... அந்த இளம் கவிஞர்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நேற்று அவர்கள்... பெற்றோரிடம், நண்பர்களிடம், சொந்தங்களிடம்... குறைந்தது 100 பேரிடமாவது அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்திருப்பார்கள்.
வண்ணதாசன் சாரின் பேச்சு ஒலிப்பதிவும் ஒளிப்பதிவுமானது. அது எக்காலத்திற்கும் அலை வெளியில் பரவி நிற்கும்.
வண்ணதாசன் சாரின் அருகிருந்து பேசத் தயங்கும்; கூச்சப்படும் என்னைப் போன்றவர்களுக்கு.. சாரின் இதைப் போன்ற உரைகள் பெருமகிழ்வைத் தரும். தந்தது.
மகிழ்ச்சி.

No comments:

Post a Comment