Tuesday, 27 November 2018

அந்த மரத்தை
யாராவது வெட்டி வீழ்த்திவிட மாட்டார்களா?
அந்த மரத்தின்மீது
யாராவது மோதிச் சாய்த்துவிட மாட்டார்களா?
அந்தப் பனங்காய் 
கீழே உருண்டு ஓடாதா?
காரங்காட்டில்
ஒற்றையாய்
பேயேறி நின்று...
இரவின் சூன்யத்தில்
அந்த ஓலையின் சலசலப்பு
இன்னும் எத்தனைபேரை காவு வாங்கும்!
என்னையும் சேர்த்து.

No comments:

Post a Comment