Tuesday, 27 November 2018

அந்தப் பூ
நாறத் தொடங்கிவிட்டது.
அந்த வீச்சம்
இங்கு வரை அடிக்கிறது.

அந்த இதயத்தில்
புழுக்கள் நெளியத் தொடங்கிவிட்டன.
இரத்தம் குடித்த
அதிலொன்று
மேலேறி
கண்பீளை வாசல் வெளியேறி
கன்னத்தில் இறங்கி
மெத்தென்று
கீழே விழுகிறது.

விழுந்த புழுவோடு
இனி
கபடி ஆட வேண்டியதுதான்.

பூவை முகர்ந்ததில்
புழுவின் வாசம்.

No comments:

Post a Comment