Sunday, 6 January 2019

கருப்பை இல்லை

அவள்
கருப்பை இல்லை என்றதும்
அவன் அருகினில்
அவன் இதயத்தில்
அவள் இருப்பை மட்டுமே ஏற்றுச் சம்மதித்திருந்தும்...

அவள் சொன்னது பொய்யாகிய
பின்பொருநாளில்
குதிச்சு.. குதிச்சே..
கருவைக் கலைத்துவிடுவேனென்று
அவனைக் கதற விட்டபோது...

கருக்கலைப்பை அல்ல
இதயக்கலைப்பை நிகழ்த்தினாள்
எருக்கஞ் சொல்லை
இதயத்தில் விட்டு விட்டுக் கிளறியபோதும்.

இதயமாற்று சிகிச்சை நடைபெறுகிறது.
அறுவை அல்ல.
அதை அவளே செய்துவிட்டாள்.
நாண் ?
விரைவில் நடக்கும்.

இதயத்துள்ளிருந்து
முதலில்
அவளைச் சாகடித்தாள்
பின்பு
அவனைச் சாகடித்தாள்

நேற்றைய பகல்
பக்கத்து இலையில்
பாயாசம் பார்த்தபோதுதான்
ஆழ்மனதில்
அவள் மீதான காதல்
மிச்சமிருப்பதை
உறுதி செய்ய முடிந்தது
அவனால்.

எக்கணமேனும்
ஜீவ சமாதி நிகழலாம்.

No comments:

Post a Comment