Sunday, 6 January 2019

இப்படியெல்லாம் நடக்குமென்று

இப்படியெல்லாம் நடக்குமென்று
எதிர்பார்த்தா
நடக்கிறது.
கார்க்காரனுக்கு குறுக்கே புகுந்த நாய்
அவனையும் விட்டுவிட்டு
அதுவும் தப்பி...
என் வழியில்
அந்த நாய்
குறுக்கே வந்திருக்க வேண்டாம்
நான் உருண்டு கொண்டிருக்கிறேன் என்பது
நன்றாக உணர்விலிருந்தது
தனக்கென்ன வேர்த்தா வடியுது என்று
கார்க்காரனும்
கண்ணுக்கெட்டா தூரத்தில்
தன் அப்பன் போக்கே
தான் போக்கு என்று
நாயும்...
போய்க் கொண்டிருந்தார்கள்.
அந்த நாயிடம்
வேறென்ன எதிர்பார்க்க முடியும்!
தரையோடு
நசுங்கியிருக்க வேண்டும்
நாய் அல்லது நான்.
இப்போதைக்கு நல்லது.

No comments:

Post a Comment