Sunday, 6 January 2019

நாகமணி

சொஸ்வத வனத்தில்
சுற்றித் திரியும்
நாகங்களிலொன்று
அதன் மாணிக்கக் கல்லை
நாகமணியை
எப்போது கக்கும்?

வெறும்
மின்மினிப் பூச்சிகளுக்காகவா?
யானையை விழுங்கிய நாளிலா?

இந்தக் காண்டீப மயக்கத்தை
நீக்குவாளா
உலுப்பி.

இச்சாதாரியிடம்
நாகமணியைத் தரும்போது
கிளைத்த
இரு சிறகுகளையும் விரித்து
நாகம் பறக்கும்
கருந்தவளைகளைக் கவ்வியபடி.

No comments:

Post a Comment