Tuesday, 4 September 2018

முல்லையும் குல்லையும்
செங்கழுநீரும் தாழையுமாய்ச் செய்த 
மாதவி மடலல்ல அது.

வயந்தமாலையோ 
கோசிகமாணியோ
சேர்ப்பித்த மடலல்ல அது.

ஓர் இளவேனில் காலத்தின் 
தேர்வு செய்த பொழுதில் 
காணிப்புப் புலங்கள் கடந்து 
நேரடியாக
கைகளில் திணிக்கப்பட்ட திருமுகம்.

எழுதியவள் மாதவி 
கண்ணகிதான் எழுதவில்லையே! 
கோசிகமானியிடனான
இரண்டாவது மடலின் சாயலில் 
சாதுர்யமாய். 

'ஹாய் டியர்' என விளித்து
'இமையும் விழியும் போல 
இணையும் நாள் எந்நாளோ'வென 
முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இடையில்
வழக்கமான 
காதல் ... இத்யாதி... இத்யாதி.. 

சாதுர்யத்தில் வீழ்பட்டு உருள்கிறது 
குழவி!

No comments:

Post a Comment