Tuesday, 4 September 2018

நீ
அன்று
கழுத்தில் கறுப்புப் பாசிமணிகள் கோர்த்திருந்தாய்.
சிறுமி நீ.
உனக்கும் எனக்குமான முதல்
கோயில் பார்த்தோம்.
குழந்தைகள்
அட்சரம் பயிலும் நாளது.
நெல்மணிகளில்
நீ என் பெயரை எழுதினாய்.
அன்றென்
மீசையில் வெட்கம் இருந்தது.
உந்தன்
கன்னத்திலும் வெட்கம் இருந்தது.
அன்று நீ என்னோடிருந்தாய்
இல்லை இல்லை
நான் உன்னோடிருந்தேன்
இன்று நீ என்னோடு இல்லை
ஆம் ஆம்
நான் உன்னோடு இல்லை.
நானெதிர்பாரா கணத்தில்...
குறும்புற்களிருந்த
என் கன்னத்தில்
நீ ஈந்த முத்தம்
இப்போது என்னிடம் இருக்கிறது.
உன்னிடம் என்ன இருக்கிறது?
அன்பே!
என்றழைக்கலாமா!
(குறிப்பு: உள்பெட்டியில் வந்து 'குதிப்பாய்' என்று நம்புகிறேன்)

No comments:

Post a Comment