(மிருதன் படத்தில், ஷ்ரேயா கோஷலின் குழைவுக் குரலில்.... 'மிருதா மிருதா மிருதா' பாடல் மெட்டில் நான் எழுதிய வரிகள்: சும்மா ஒரு .... try. அதே மெட்டில் பாடிப் பாருங்களேன். )
நேற்று முடிந்தது நினைவில்லையா
இன்று விடிந்தது உணர்வில்லையா
இன்று விடிந்தது உணர்வில்லையா
நாளைப் பொழுதை நம்பவில்லையா
மனமே என்பது மாயப் பிழையல்லவா !
மனமே என்பது மாயப் பிழையல்லவா !
சூழ்ச்சிகள் எதுவும் உன்னைத் தடுப்பதுண்டா !
மந்திரம் அதனால் ஒரு மாற்றமுண்டா
தோழா....
மந்திரம் அதனால் ஒரு மாற்றமுண்டா
தோழா....
இன்னும் ஒரு விடியல் வரும்
இன்றும் ஒரு இரவு வரும்
எப்போதாவது நிலவும் வரும்
இன்றும் ஒரு இரவு வரும்
எப்போதாவது நிலவும் வரும்
கொஞ்சம் உணவும் உண்டு
கொஞ்சம் கனவும் உண்டு
நீலக் கடலின் வரை தொடலாம்
கொஞ்சம் கனவும் உண்டு
நீலக் கடலின் வரை தொடலாம்
இன்னும் ஒரு வாழ்க்கை வரும்
இன்னும் ஒரு தெய்வம் வரும்
எப்போதாவது வரத்தைத் தரும்
இன்னும் ஒரு தெய்வம் வரும்
எப்போதாவது வரத்தைத் தரும்
காலப் பிழையைக் கடந்துவிடு
கோலம் கண்டு நகர்ந்துவிடு
உடலோடு பேசு
மெய்யே. ...... ஞானம்.
கோலம் கண்டு நகர்ந்துவிடு
உடலோடு பேசு
மெய்யே. ...... ஞானம்.
No comments:
Post a Comment