Tuesday, 4 September 2018

அந்தக் காடுகளில்தான்
பேன்கள் நேருக்கு நேர்
பேரிரைச்சலோடு
மோதிக் கொண்டன

துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு
வெறிபிடித்து ஓடுகையில்
கன்னிவெடிகளில் கால் பதித்து
பேன்களும் வெடித்துச் சிதறின

எடுக்கப்பட்ட புலிகளோ
மழிக்கப்பட்ட சிங்கங்களோ
இப்போது இல்லை.

பேன் வனம்
பாலைவனமாகியிருக்கிறது.
பேன்கள்
சிங்கமெனச் சொல்லிக்கொண்டு
ஊர்வலம் போகலாம்!

No comments:

Post a Comment