Tuesday, 4 September 2018

பானைக்குள்
பெருங்காற்று
நிரம்பி இருக்கிறது.
காற்று சும்மா விடுவதில்லை.
சுழன்று கொண்டேயிருக்கிறது
காற்று நிற்குமா!
கட்டாயப்படுத்த முடியுமா?
காற்றே வெளியேறு.
நீர் ஊற்றலாம்.
நீர் கிடைக்குமா ?
நீரும் சும்மா இருப்பதில்லை.
சுழன்றால் என் செய்வது?
நீரே வெளியேறு.
கற்கள் நிரப்பலாம்
கற்கள் பானை அறியுமா ?
கற்களின் மூச்சு பானையைத் தொடுமா?
பானையின் தவிப்பு கற்கள் அறியுமா ?
காற்றோ... நீரோ... கல்லோ...
பானையை உடைத்து விடுமா!
பானை என்றால் உடையத்தான் வேண்டுமா!
பானை உடையுமெனில்...
காற்று அலையும்.
நீர் சிந்தும்.
கற்கள் சிதறும்.
பானை உடையுமெனில்....
பானை தூளாகும்.
பானை பூக்களுமாகும்.

No comments:

Post a Comment