Tuesday, 4 September 2018

இந்த வாரம் ஆனந்த விகடனில் (பிப்.21, 2018) அன்பன் (அன்பு ராஜ்) என்பவரின் வாழ்க்கையைப் படித்தேன். சாதாரணமாக வாசித்துக் கொண்டிருந்த எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கூடுவதை உணர்ந்தேன். முடிப்பதற்குச் சற்றுமுன், உடைந்து போய்விட்டேன். கண்களிலிருந்து நீர்வழிய... அதற்குமேல் அந்த இடத்தில் இருக்க முடியாமல்.. நூலகத்திலிருந்து வெளியேறிவிட்டேன். அவர் கதையை அவர் குரலிலேயே கேட்டதுதான் கூடுதல் அழுத்தம். அவருக்கு இப்படி, அப்படி என்று வேறொருவர் சொல்லியிருந்தால்கூட, இவ்வளவு வலி எனக்குள் இருந்திருக்காது என்றே நம்புகிறேன்.
படியுங்களேன்.
நீங்கள் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல..
வாழ்வின் மீதான நம்பிக்கைக்காக...
இதோ... வீடு வந்த பின்னும்.. கண்களை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்...
சிறையை(ச்) / சீர்திருத்திய / அன்பன். அந்தச் சிரிப்பில் ஞானம் இருக்கிறது.

No comments:

Post a Comment